மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்த அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன்

|

மும்பை: அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்துள்ளனர்.

மும்பை சர்வதேச மோட்டார் ஷோ 2015 நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன், ஷமிதாப் இயக்குனர் ஆர். பால்கி ஆகியோர் துவக்கி வைத்தனர். அக்ஷரா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மும்பை சர்வதேச மோட்டார் ஷோவை துவக்கி வைத்த அமிதாப், அக்ஷரா ஹாஸன்

மும்பை பந்த்ரா-கர்லா காம்பிளக்ஸில் உள்ள எம்எம்ஆர்டிஏ கிரவுண்டில் ஷோ நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 8ம் தேதி வரை நடைபெறும். நிகழ்ச்சியில் ஜாக்குவார், ஆடி, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ உள்ளிட்ட பல பிராண்டுகளின் வாகனங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமிதாப், அக்ஷரா, பால்கி ஆகியோர் ஜிக்வீல்ஸ் பத்திரிக்கையை வெளியிட்டனர். அமிதாப் பச்சன் பாலிவுட்டில் மட்டும் இல்லை விளம்பர உலகிலும் ஜாம்பவான் தான்.

தனுஷ், அமிதாப், அக்ஷரா ஆகியோர் நடித்துள்ள ஷமிதாப் படம் இன்று தான் ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment