இவள் வேற மாதிரி... இதழ்களை விரிக்கத் தயாராகும் பூ!

|

சென்னை: வாரிசு நடிகரும் அறிமுகமான படத்தில் அழகுப் பதுமையாக வந்து போனார் இந்த ரபி நடிகை. அதனைத் தொடர்ந்து சூப்பரின் மருமகன் படத்திலும் அதே போன்ற கதாபாத்திரமே.

முதல் இரண்டு படங்களிலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்ததால், நடிகைக்கு சினிமாவில் தாக்குப் பிடிப்பது சிரமம் என அவரது நலம் விரும்பிகள் அறிவுரை கூறுகிறார்களாம்.

அதனால் தற்போது நடித்து வரும் வெற்றிப் படத்தில் தனது முழு ‘திறமை'யையும் காட்டி விடும் முடிவில் இருக்கிறாராம் நடிகை. மேலும், புதிய படங்களுக்காக அணுகும் தயாரிப்பாளர்களிடமும் நான் "ரெடி".. நீங்களும் ரெடியா இருந்துக்கோங்க என்று கூறி வருகிறாராம்.

கூடுதல் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமானால், கூடுதல் சம்பளம் கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், மிகப் பெரிய சலுகையாக, அதே சம்பளத்தில் கவர்ச்சி மழை பொழிகிறேன் எனக் கூறினால், தயாரிப்பாளர்களுக்கு கசக்கவா செய்யும். ஸ்வீட் எடு கொண்டாடலாம் என்று அவர்களும் குஷியாகி விட்டார்களாம்.

நடிகையின் இந்த முடிவிற்குப் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு சந்தோஷம் தான்...!

 

Post a Comment