பெங்களூரு: தமிழில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான முதல்வன் படத்தில் ஜோடி சேர்ந்த அர்ஜூன் மற்றும் மனீஷா கொய்ராலா மீண்டும் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக்ஸ் ஆபீசில் ஹிட்டான இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெய்ஹிந்த்-2. இப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பிறகு கன்னடத்தில் "கேம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் வனயுத்தம், சையனைடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிப்பதற்காக அர்ஜுன் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலாவை படக்குழுவினருக்கு பரித்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
மேலும், இப்படம் மூலமாக மனிஷா கொய்ராலாவை தன்னுடைய ஜோடியாக மீண்டும் நடிக்க வைத்து பெரிய ஹிட் கொடுக்க அர்ஜூன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment