சென்னை : பிரபல நடிகரின் தயாரிப்பில் உருவாகி வரும் தாதா படத்தில் முன்னணி நாயகி ஒருவர் நடித்து வருகிறார்.
நாயகனாக நடித்து வருபவரும் முன்னணி நடிகர் தான் என்றாலும், நடிகை அவருக்கும் சீனியர். எனவே, படப்பிடிப்பு தளத்தில் நடிகரை விட நடிகைக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதாம்.
நாயகிக்கு மட்டுமின்றி அவருடன் உடன் வருபவர்களுக்கும் ராஜ உபச்சாரம் நடக்கிறதாம். ஆனால், இதற்கு மாறாக நடிகரின் உடன் வருபவர்களைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம்.
‘காபி குடிச்சீங்களா சார்... டீ குடிச்சீங்களா சார்..?' என அவர்கள் பண்ணும் அலப்பறைகளைப் பார்த்து, நடிகரின் சகாக்கள் நடிகரிடம் முறையிட்டுள்ளனர். எளிமை மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் தரும் அந்த நடிகர், ‘இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என சகாக்களுக்கு ஆறுதல் கூறினாராம்.
மேலும், இந்த விவகாரம் தயாரிப்பு நடிகரின் காதுகளுக்கு சென்று, அவர் மனது புண்படாதபடி பார்த்துக் கொண்டாராம்.
என்னமோ போடா மாதவா....!
Post a Comment