டஜிகர்தண்டா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘இறைவி' படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள்.
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், "இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளராக கேவ்மிக் யு ஆரி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குனராக விஜய் முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்," என்று கூறியுள்ளனர்.
Post a Comment