'ஆளேத்த' ஆயத்தம் நடக்குது.. அமெரிக்கா உஷார்!

|

ஆளேத்தறது... இந்த வார்த்தை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தரும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல.. தமிழ் சினிமாவிலும் ரொம்பப் பிரபலம்.

கும்பலாகப் படப்பிடிப்புக்குப் போவது, அல்லது கலை நிகழ்ச்சி நடத்தப் போவதுபோல போய், அங்கேயே சிலரை விட்டுவிட்டு வருவதுதான் இந்த 'ஆளேத்தறது'. அதாவது சட்டவிரோத குடியேற்றம்.

'ஆளேத்த' ஆயத்தம் நடக்குது.. அமெரிக்கா உஷார்!

இந்த மாதிரி ஒரு வேலையைப் பார்த்தார் என்றுதான் சில ஆண்டுகளுக்கு முன் ப்ளோரா என்ற நடிகை மீது குற்றம் சாட்ட, அவர் பிரஸ் மீட் வைத்து விளக்கமெல்லாம் கொடுத்தார்.

ஆனாலும் சத்தமின்றி இந்த வேலையை சில சீனியர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்களாம்.

குறிப்பாக அமெரிக்கா, கனடாவுக்கு இந்த மாதிரி சட்டவிரோதமாக நபர்களை அனுப்ப கலை நிகழ்ச்சிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களாம்.

அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா, கனடாவில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பெரிய குழுவே சென்னையிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறப்படுகிறது. சில நடிகைகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்களாம். அதில் கலைஞர்களுடன், சம்பந்தமே இல்லாத சில இளைஞர் - இளைஞிகளும் கிளம்பப் போகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.

 

Post a Comment