டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து, இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமான எஸ்ஏசி!

|

இனி படம் இயக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டு டூரிங் டாக்கீஸை வெளியிட்டார் எஸ் ஏ சந்திரசேகரன். படத்துக்கு நல்ல வரவேற்பு. விமர்சனங்களும் பாஸிடிவாக வந்தவண்ணம் உள்ளன.

இயக்குநராகத்தான் இது கடைசி படம். ஆனால் நடிகராக, தயாரிப்பாளராக திரையில் தொடர்வேன் என்று கூறியிருந்தார்.

டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து, இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமான எஸ்ஏசி!

போகிற போக்கைப் பார்த்தால் அவருக்கு படம் தயாரிக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ், கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பாக்பான் எனும் படத்தின் கதையைத் தழுவியது என்கிறார்கள்.

இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்று தலைப்பிட்டுள்ளனர்.

 

Post a Comment