திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

|

சென்னை: இன்று திருமண நாள் காணும் ரஜினிகாந்த், தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களைச் சந்தித்தார்.

ரஜினி - லதா தம்பதியினருக்கு இன்று 35 வது திருமண நாளாகும்.

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

வழக்கமாக ஆண்டின் விசேஷ நாட்களில் ரஜினி வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்துவதும் வாழ்த்துகள் பெறுவதும் ரசிகர்களின் வழக்கம்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினி பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் தவறாமல் ரஜினியின் வீட்டு முன் கணிசமான ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

பெரும்பாலும் அவர்களை ஏமாற்றாமல், சந்தித்து வாழ்த்தி அனுப்புவார் ரஜினி. அவர் இல்லாத நேரங்களில் லதா ரஜினி ரசிகர்களைச் சந்திப்பார்.

இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அடுத்து இன்று திருமண நாளன்றும் சந்தித்தார்.

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

காலையிலேயே ரஜினி - லதா தம்பதியரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை ரஜினியின் உதவியாளர் சத்தியநாராயணா ஒழுங்குபடுத்தினார். பின்னர் ரஜினி வெளியில் வந்து சிறு மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கும்பிட்டார்.

ரசிகர்கள் அவரைப் பார்த்து தலைவா.. வாழ்த்துகள் என்று முழங்கினர். அவரும் சிரித்தபடி நன்றி கூறி வாழ்த்துகளை ஏற்றார்.

 

Post a Comment