தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த ப்ளோராவுக்கு கொலை தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
கவர்ச்சி நடிகையான ப்ளோரா, தமிழில் குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ரிலீசான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் மனித வெடி குண்டாக நடித்திருந்தார் ப்ளோரா. மதங்களை விமர்சிக்கும் இந்தப் படத்தில் பெண் தீவிரவாதியைப் போல் அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இந்த கேரக்டரில் ப்ளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்திருந்தனர்.
தற்போது அவருக்கு மொபைல் போனில் அழைப்புகளாகவும், குறுஞ்செய்திகளாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றனவாம்.
இதனால் பயந்துபோன ப்ளோரா போலீசில் புகார் செய்துள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை. எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.
Post a Comment