சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அம்மா அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பசியோடு வருபவர்கள் வயிறார சாப்பிட இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு அறிவித்திருந்தார்.
அதை இன்று செயல்படுத்திவிட்டார்.
இந்தத் திட்டத்துக்கு அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை இளையராஜா தன் கையால் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, துணை தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துடன் இந்தத் திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment