மம்முட்டி மகன் துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடிப்பில், மணி ரத்னம் உருவாக்கியுள்ள அடுத்த படமான ஓகே கண்மணியை முதலில் தமிழில் மட்டும் வெளியிடுவதாகத்தான் திட்டமிட்டிருந்தார்.
ஹீரோ ஹீரோயின் இருவருமே மலையாளிகள் என்பதால் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியிடத் திட்டமிட்டார் (கேரளாவில் அதிகமாக ஓடுவதும் நேரடித் தமிழ்ப் படங்கள்தானாம்).
இந்த நிலையில் படத்தை தெலுங்கிலும் வெளியிடும் ஆசை வந்துவிட்டதாம். உடனே அவர் தெலுங்கு டப்பிங்குக்காக பக்காவாக ஆள்தேடினார். நினைவில் பளிச்சிட்டவர் நடிகர் நானி.
அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், துல்கர் சல்மானுக்காக தெலுங்கு டப்பிங் பேச சம்மதமும் பெற்றுவிட்டார்.
இதுகுறித்து நடிகர் நானி கூறுகையில், "அவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரே போனில் கூப்பிட்டு டப்பிங் பேசக் கேட்கும்போது மறுக்கவா முடியும்?" என்றார்.
ஓகே கண்மணியின் தெலுங்கு உரிமையை தில் ராஜூ பெற்றுள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் ஓகே பங்காரம்!
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment