தொழிலதிபரும் நடிகருமான ஆர்கே ஒரு முறை பேசுவதைக் கேட்டால் போதும்,கேட்பவர்கள் மனங்கள் முழுவதும் அவர் பக்கம் திரும்பிவிடும்.
இதிரையுலகில் விடாமுயற்சியால் தனக்கான ஓர் இடத்தைத் தேடிப்பிடித்துஅடைந்திருக்கிறார் ஆர்கே.
எதிலும் தனித்து வெளிப்பட விரும்பும் அவர், வியாபாரம் தொடர்பாகவும் ,சுயமுன்னேற்றும் சார்ந்தும் தன்னம்பிக்கை கருத்துக்களை பல்வேறு கூட்டங்கள் மூலம் பரப்பி வருகிறார்.
தனது 'வாங்க சாப்பிடலாம்' ஓட்டலில் சினிமா தொடர்பானவர்கள் சங்க உறுப்பினர் கார்டுடன் சாப்பிட வருகிறவர்களுக்கு உணவு விலையில் 10 சத விகித சலுகை வழங்கினார்.
அண்மையில் தன் 'என்வழி தனி வழி' படத்தின் ட்ரெய்லரை வெளியிடும்போது கூட ஒரு புதுமை செய்தார். பட விளம்பரம் வந்த செய்தித் தாளில் அந்த விளம்பரத்தின் மீது மொபைல் போனைக்காட்டி க்ளிக் செய்தால் போதும் ட்ரைலர் தெரியும். அது இந்தியாவில் முதல் முயற்சி என்று பேசப் பட்டது.
இப்போது அவரது 'என் வழி தனி வழி' படம் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு சலுகைக் கூப்பனை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூப்பன்கள் படம் வெளியாகியுள்ள எல்லா திரையரங்கு வாசலிலும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்ற கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைத்துக் கொள்வார்கள். அதாவது டிக்கெட்100 ரூபாய் என்றால் 90 ரூபாய் போதும்.
ரசிகர்களுக்கு ஆர்கே வழங்கும் சலுகைக் கட்டணத்தில் மீதமாகும் பணத்தில் நொறுக்குத் தீனியையும் வாங்கிக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்த சலுகை என ஆர்கே தெரிவித்துள்ளார்!
Post a Comment