சென்னை: சவாலே சமாளி' திரைப்பட பாடல்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கவிதா பாண்டியன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்.
அந்த மனுவில், "எங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சவாலே சமாளி' என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறோம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்குகிறார், தமன் இசையமைத்துள்ளார்.
நடிகர் நாசர், அசோக் செல்வன், ஜெகன், நடிகை பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுவற்குரிய உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம்.
இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் பாடல்களை சில மர்ம நபர்கள், திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் எங்களது நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment