டோணி பாய்ஸ் ஜெயிச்சிருந்தால் இந்த கொசுத் தொல்லை தீர்ந்திருக்கும்!!!

|

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த நடிகர் கேஆர்கே ட்விட்டரை விட்டே விலகியிருந்திருப்பார், பாலிவுட்டும் நிம்மதி அடைந்திருக்கும்.

காலையில் எழுந்த உடன் இன்று எந்த நடிகர், நடிகையை ட்விட்டரில் வம்புக்கு இழுப்பது என்பதை பிழைப்பாக வைத்துள்ளவர் தான் இந்தி நடிகர் கேஆர்கே. நடிகரா? ஆமாம் அவர் தான் அப்படி சொல்லிக் கொள்கிறார். ட்விட்டரில் அவர் தெரிவிப்பதை பார்த்து சண்டைக்கு பாய்ந்தவர்களும் உண்டு, இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை என்று கண்டுகொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.

டோணி பாய்ஸ் ஜெயிச்சிருந்தால் இந்த கொசுத் தொல்லை தீர்ந்திருக்கும்!!!

இந்நிலையில் தான் பாலிவுட்காரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் கேஆர்கே ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தான் ட்விட்டரில் இருந்து விலகிவிடுவதாக தெரிவித்தார்.

அவரின் நல்ல நேரம், பாலிவுட்காரர்களின் கெட்ட நேரம் இந்தியா அரையிறுதிப் போட்டியில் தோற்றுவிட்டது. விளைவு கேஆர்கேவின் ட்விட்டர் ஆட்டம் இன்னும் அதிகரித்துவிட்டது.

 

Post a Comment