உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்றதற்கு காரணம். எனவே அவர் வீட்டு மீது கல்லெறியுங்கள் என்று தேஷ்துரோகி பட நடிகர் கமல் ரஷித் கான் ரசிகர்களைத் தூண்டியுள்ளார். மேலும் கேவலமான கமெண்டுகளையும் அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.
முன்னணி நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்களை கிண்டலடித்து பப்ளிசிட்டு பார்க்கும் நபர்தான் இந்த கமல் கான்.
இந்திப் பட உலகில் முதல்நிலை நடிகையான அனுஷ்கா சர்மாவை இப்போது வம்புக்கிழுத்துள்ளார்.
அவர் சிட்னி போனதால்தான் விராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை என்றும், அதனால் அனுஷ்கா வீட்டின் மீது ரசிகர்கள் கல்லெறிய வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இனி அனுஷ்கா சர்மா நடிக்கும் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
விராட் கோஹ்லியை மிக மட்டமாக கிண்டலடித்துள்ளார்.
"சிட்னி கிரவுண்டில் நன்றாக விளையாடுவார் விராட் கோஹ்லி என மக்கள் நம்பினர். ஆனால் இரவெல்லாம் விளையாடிய அவர் பகலில் ஏன் விளையாடப் போகிறார்?"
-இதெல்லாம் டூ டூ மச்!
Post a Comment