கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

|

சென்னை: கொம்பன் படத்தில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை. இது முழுமையான குடும்பப் படம், வெளியாக உதவுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாடார் அமைப்புகள் போன்றவை போராட்டத்தில் இறங்கியுள்ளன. படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிடும்.

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்,'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment