மும்பையில் வீடு வாங்கிய தனுஷ்: ஜாகையை மாற்றுகிறாரா?

|

மும்பை: தனுஷ் மும்பை அந்தேரி பகுதியில் வீடு வாங்கியுள்ளார்.

ஆனந்த் எல் ராயின் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். அந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்த பாலிவுட் மற்றும் வட இந்திய ஊடகங்கள் அவரை புகழ்ந்து தள்ளியது. ரசிகர்களும் தங்களின் அன்பை தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் நடித்த ஷமிதாப் படமும் நல்ல வசூல் செய்துள்ளது.

மும்பையில் வீடு வாங்கிய தனுஷ்: ஜாகையை மாற்றுகிறாரா?

இந்நிலையில் தனுஷ் மும்பை அந்தேரி பகுதியில் ஆனந்த் எல் ராய் வசிக்கும் அதே கட்டிடத்தில் ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கியுள்ளாராம். தனுஷ் மும்பையில் வீடு வாங்கிவிட்டாரா, அப்படி என்றால் ஜாகையை மாற்றிவிடுவாரா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கும் ஆசை இருந்தாலும் கோலிவுட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று தனுஷே தெரிவித்துள்ளார். அதனால் அவர் ஜாகையை எல்லாம் மாற்ற மாட்டார். படப்பிடிப்புக்காக மும்பை செல்கையில் ஹோட்டலுக்கு பதில் வீட்டில் தங்கலாமே என்று நினைத்து வாங்கிப் போட்டிருப்பார்.

மேலும் நடிகர், நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வரும் வேளையில் தனுஷ் மும்பையில் வீடு வாங்கியது பெரிய விஷயம் அல்ல.

 

Post a Comment