திருட்டு "காக்கிச் சட்டை"யை கையும் களவுமாக பிடித்த கரூர் போலீஸ்!

|

கரூர்: கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.

கரூர் நகரில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம்புது திரைப்படங்கள் திருட்டு வி.சி.டியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.

திருட்டு

அப்போது, புதுப்பட சி.டிகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதில் எனக்குள் ஒருவன், அனேகன், காக்கிசட்டை, வெள்ளைக்காரத்துரை, கதம் கதம், டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் சிக்கின.

மேலும் இதை விற்பனை செய்த கரூர் பாரதியார் தெருவில் வசிக்கும் முருகன் (எ) கார்த்திக் (வயது 30), பெரியார் நகர் பகுதியை சார்ந்த சரவணன் (வயது 32), செல்லாண்டிபாளையம் பகுதியை சார்ந்த திருமூர்த்தி (வயது 29), ஆகிய 3 பேரை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 200 புதுப்பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டது,

 

Post a Comment