கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை

|

மும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் அறுவை சிகிச்சை மூலம் தனது உதடுகளை அழகாக ஆக்கியுள்ளார்.

ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் வாணி கபூர். அதையடுத்து ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். பாலிவுட்டில் நுழைந்த புதிதில் பலரின் கவனத்தை ஈர்த்த வாணிக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை. அதனால் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை

இந்நிலையில் அண்மையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வாணி கபூர் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். ரிலையன்ஸ் காலணிகளுக்காக ராம்ப் வாக் செய்தார் வாணி.

அவர் ஒய்யாரமாக நடந்தபோது மக்களின் கவனம் அவரது காலணிகளில் அல்லாமல் உதட்டில் இருந்தது. காரணம் அவர் அறுவை சிகிச்சை செய்து உதடுகளை அழகாக்கியுள்ளார். ஆனால் இதை அவர் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.

முன்னதாக கத்ரீனா கைப், கங்கனா ரனாவத், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை அழகாக்கியுள்ளனர்.

 

Post a Comment