சென்னை: நான் ஹீரோவாக இருந்தும் அந்த மொட்டை பாஸ் வில்லனை தான் முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்கிறார்களே என்று சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள நடிகர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
சின்னத்திரையில் நாடகங்களில் நடிப்பதுடன், நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார் அந்த தீபமான நடிகர். அவர் சின்னத்திரையில் இருந்து அவ்வப்போது பெரிய திரைக்கு வந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற அந்த சிவமான நடிகரை போன்று நாமும் வர வேண்டும் என நினைத்து அவர் சந்தோஷமாக படத்தில் நடித்து முடித்தார்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களோ ஹீரோவும் புதுசு, ஹீரோயினும் புதுசு அதனால் விளம்பரங்களில் தெரிந்த முகமாக போடுங்கள், மக்கள் படம் பார்க்க வர வேண்டாமா என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து படத்தில் வரும் மொட்டை பாஸ் வில்லனை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது.
மேலும் படத்தில் சில திருத்தங்கள் செய்து வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த நடிகர் அடப்பாவமே ஹீரோ என்னை ஜீரோவாக்கிவிட்டு வில்லனை தலையில் வைத்து கொண்டாடுகிறார்களே என்று புலம்பித் தள்ளுகிறாராம்.
Post a Comment