செல்வராகவனும் சிம்புவும் இணைந்து புதிய படம் செய்யப் போவதாக ரொம்ப நாட்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்தவண்ணமிருந்தன.
ஆனால் இடையில் இந்தப் படம் கைவிடப்பட்டது என்றும், எல்லாம் தனுஷ் நடத்திய நாடகம் என்று கூட சிலர் கூறிவந்தனர்.
ஆனால் அப்படியெல்லாம்.. இதோ படத்தை ஆரம்பித்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர் இருவரும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போகிறார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டைதான் இருவரும் இணைந்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மது அம்பாட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.
இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அவர் ஏற்கெனவே நடித்து ரொம்ப நாள் கிடப்பில் உள்ள வாலு இந்த மாதம் வெளியாகிறது.
Post a Comment