என்னமோ நடக்குது வெற்றியைத் தொடர்ந்து விஜய் வசந்த் நடிக்கும் புதிய படத்துக்கு அச்சமின்றி எனத் தலைப்பிட்டுள்ளனர்.
என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டியே இந்தப் படத்தையும் இயக்க, ட்ரிபிள் வி ரிகார்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய் வசந்தின் சகோதரரது சொந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தப் படத்துக்கு சிகண்டி என்று தலைப்பிட்டிருந்தனர். இப்போது அச்சமின்றி என மாற்றியுள்ளனர்.
இந்தப் படத்தில் விஜய் வசந்துக்கு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இருபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.
Post a Comment