பாலிவுட்டில் நுழைகிறாராம் பிரமாண்ட இயக்குனர்?

|

சென்னை: பிரமாண்ட இயக்குனர் பாலிவுட் பாதுஷாவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

பிரமாண்ட இயக்குனர் தன் உருவத்தை அடிக்கடி மாற்றும் நடிகரை வைத்து ஆண்டுக் கணக்கில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். அந்த படம் வெளியான பிறகு மும்பை போன இயக்குனர் அங்கேயே தங்கியுள்ளாராம்.

கோலிவுட் ஹீரோக்கள் வரிசையில் நிற்க பாலிவுட் செல்லும் பிரமாண்டம்?

அவர் உச்ச நடிகரை வைத்து ஒரு படத்தை எடுக்கக்கூடும் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் தற்போது தமிழில் படம் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அண்மை காலமாக பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடிக்கும் பாலிவுட் பாதுஷாவை வைத்து படம் எடுக்க பிரமாண்ட இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம். தெலுங்கில் ஒரு படத்தை விரைவில் இயக்குவேன் என்று தெரிவித்த இயக்குனர் தற்போது பாலிவுட்டில் நுழைகிறாராம்.

அவரின் படத்தில் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் காத்திருக்க அவரோ பாலிவுட் ஹீரோவைத் தேடி மும்பை சென்றுள்ளார்.

 

Post a Comment