பிரபல கன்னடப் பட நடிகை மாலாஸ்ரீக்கு, ரியல் எஸ்டேட் கும்பல் ஒன்று ஆசிட் வீட்டு மிரட்டல் விடுத்துள்ளது.
சென்னையில் பிறந்து, பெங்களூரில் செட்டிலாகி, கன்னட ஆக்ஷன் படங்களில் நடித்தவர் மாலாஸ்ரீ.
மாலாஸ்ரீக்கு கர்நாடகம், மற்றும் ஆந்திராவில் நிறைய சொத்துக்கள் உள்ளன.
அவற்றில் ஒரு சொத்தை சமீபத்தில் விற்பனை செய்தார் மாலாஸ்ரீ. இதில் அவருக்கு சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து மாலாஸ்ரீக்கு மிரட்டல் வந்துள்ளது.
மூன்று பேர் அவரை போனில் தொடர்பு கொண்டு, முகத்தில் ஆசிட் அடிக்கப் போவதாக மிரட்டியுள்ளனர்.
இது கன்னடப் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசில் மாலாஸ்ரீ புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நடிகைக்கு பகிரங்கமாக ஆசிட் வீச்சு மிரட்டல் வந்திருப்பது இதுதான் முதல் முறை என்பதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர்கள் சென்னையைச் சேர்ந்த சில ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மற்றும் தரகர்கள் என்று தெரியவந்துள்ளது.
Post a Comment