மும்பை: ஆபாசமாக உடை அணிந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வசந்தத்தை வரவேற்கும் விதமாக வண்ண வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது, பிரபல இந்தி கவர்ச்சி நடிகை சோபியா கயாத்தின் ஹோலி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
அதில், அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்தவாறு அவர் ஹோலி கொண்டாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.
சோபியாவின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கொச்சைப்படுத்தி உள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சோபியா மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சோபியா விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment