பிரபல நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை கனடாவில் பிறந்துள்ளது.
தொன்னூறுகளில், தொடையழகி என்ற பட்டத்தோடு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரம்பா.
ரஜினி, கமல் என முதல் நிலை நாயகர்களுடன் நடித்தார். பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார்.
இவர்களுக்கு 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர்.
இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கனடாவில் வைத்து பிரசவம் நடந்தது.
Post a Comment