தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

|

62-வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பில். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள பாபி சிம்ஹாவுக்கு, இயக்குநர் மனோபாலா பாராட்டு தெரிவித்து கவுரவித்தார்.

‘ஜிகர்தண்டா' படத்திற்காக பாபி சிம்ஹா இந்த விருதினைப் பெற்றுள்ளார். பாபி சிம்ஹா தற்போது ‘பாம்பு சட்டை' படத்தில் நடித்து வருகிறார்.

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

இப்படத்தை ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றதற்கு தயாரிப்பாளரும் நடிகருமான மனோபாலா, பாபி சிம்ஹாவிற்கு மாலை அணிவித்து கவுரவித்தார்.

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

பாபி சிம்ஹாவைப் பற்றி மனோபாலா கூறுகையில், "பாபி சிம்ஹாவை திரையில் பார்த்து அவருடைய நடிப்பால் ஈர்க்கப்பட்டவன் நான். சிம்ஹா தன்னுடைய நடிப்பால் பல்வேறு பார்வையாளர்கள் மத்தியில் ஊடுருவி உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது ஒரு ஆரம்பம் தான். அவர் மேலும் பல வெற்றிகளை நிச்சயம் பெறுவார். என்னுடைய படமான ‘பாம்பு சட்டை'யில் அதிக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்," என்றார்.

 

Post a Comment