பிரபு மகன் வெள்ளக்கார துரை... அடுத்து சத்யராஜ் மகன் ஜாக்சன் துரை!

|

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த வெள்ளக்கார துரை சமீபத்தில் வந்து ஓரளவு வெற்றியும் பெற்றது.

வெற்றி பெற்ற படங்களின் தலைப்பை நகலெடுப்பதுதானே தமிழ் சினிமா வழக்கம். அந்த வகையில், இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் அடுத்து நடிக்கும் படத்துக்கு ஜாக்சன் துரை என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்.

பிரபு மகன் வெள்ளக்கார துரை... அடுத்து சத்யராஜ் மகன் ஜாக்சன் துரை!

மாசாணி, சலீம் படங்களைத் தயாரித்ததோடு, வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிசட்டை, கயல் போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்த நிறுவனம் இது.

"நாய்கள் ஜாக்கிரதை" வெற்றிக்கு பிறகு கவனம் பெற்றுள்ள சிபிராஜ் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அவர் தந்தை சத்யராஜ் நடிக்கிறார்.

பெயர்தான் ஜாக்சன் துரை. மற்றபடி இது தமிழ் சினிமாவின் இப்போதைய ட்ரெண்டான பேய்ப் படமாக உருவாகிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய தரணிதரனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். விபின் சித்தார்த் இசையமைக்கிறார்.

 

Post a Comment