சென்னை: நடிகர் விக்ரமின் புதிய படம் ஒன்றில் அவருக்கு இரண்டாவது கதாநாயகியாக நடிக்க உள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ப்ரியா ஆனந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா". அதற்கு முன் இவரது நடிப்பில் வெளிவந்த இரும்பு குதிரை படமும் சரியாக போகாதால் பெரிய வருத்தத்தில் இருக்கிறார்.
இருப்பினும், தற்போது இவர் நடித்துள்ள "வை ராஜா வை" படம் தனக்குப் பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில், "அரிமா நம்பி" படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருந்தார்.
தற்போது, இப்படத்தில் இன்னொரு நாயகியாக ப்ரியா ஆனந்தும் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். ப்ரியா ஆனந்துக்கு இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து டூயட் பாடும் காட்சிகளும் இருக்கிறதாம்.
ஆகையால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள, இரண்டாவது நாயகியாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புக் கொண்டாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment