தனது விசாரணை படத்தின் ட்ரைலரை சமீபத்தில் காலமான எடிட்டர் கிஷோருக்கு சமர்ப்பிப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விசாரணை. இந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளில் தீவிரமாக இருந்தபோதுதான் எடிட்டர் கிஷோர் மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார்.
இன்று இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் இந்த ட்ரைலரை என் அன்புக்குரிய எடிட்டர் கிஷோருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் வெற்றி மாறன்.
அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை தனுஷும் வெற்றி மாறனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
எம் சந்திரகுமார் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகிறது.
Post a Comment