சென்னை: நடிகர் அஜீத் குமாருக்கு இன்று மூக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.
நடிகர் அஜீத் குமாருக்கு மூக்கு தண்டில் சைனஸ் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. அடிக்கடி மூக்கு அடைத்துக் கொண்டு, பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு மூக்குத் தண்டு அறுவைச் சிகிச்சை (Septoplasty) செய்ய மருத்துவர்கள் பரிசீலித்தனர்.
அதன்படி இன்று காலை அவருக்கு பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் எம் கே ராஜசேகர் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்தார்.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அஜீத் குமார் வேகமாக உடல் நலம் பெற்று வருவதாக அவரது மேலாளர் தகவல் தெரிவித்தார்.
Post a Comment