அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' படம் வரும் மே 22-ம் தேதி வெளியாகிறது.
ஜே சதீஷ்குமார், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்'.
அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.
"நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறித்தனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதை கதை விவரிக்கிறது.
அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மே 22ஆம்தேதி வெளியாகும்", என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment