நாளை வெளியாகும் ராகவா லாரன்சின் காஞ்சனா, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கு தியேட்டர்கள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
காஞ்சனா 2-க்கு 350 அரங்குகளும், ஓ காதல் கண்மணிக்கு 250 அரங்குகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரண்டு படங்களையுமே பிரபலமான நிறுவனங்கள் விநியோகிப்பதால், நல்ல திரையரங்குகளே கிடைத்துள்ளன.
காஞ்சனா 2-ஐ தேனாண்டாள் நிறுவனமும், ஓ காதல் கண்மணியை ஸ்டுடியோ கிரீனும் வெளியிடுகின்றன. ஆனால் மணிரத்னம் படம் என்பதால் ஏ மற்றும் பி சென்டர்களில் மட்டும் அதிக அரங்குகளில் வெளியிட்டால் போதும் என ஸ்டுடியோ கிரீன் முடிவெடுத்துள்ளது.
கிராமப்புறம் சார்ந்த திரையரங்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளது காஞ்சனா 2-க்கு.
Post a Comment