‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய படமான ஓ காதல் கண்மணி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கிறது.
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் - நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘அலைபாயுதே' பாணியிலான காதல் படமாக ஓ காதல் கண்மணியை உருவாக்கியுள்ளாராம் மணிரத்னம். அவரது மெட்ராஸ் டாக்கீஸ்தான் தயாரிக்கிறது படத்தை.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியானது. மென்டல் மனசு.. என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அடுத்து படத்தின் இசையை ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியிடப் போவதாக மணிரத்னம் அறிவித்துள்ளார்.
Post a Comment