மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்துக்கு தணிக்கைக் குழு யு ஏ சான்று அளித்துள்ளது. இதனை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார்.
துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை நேற்று முன்தினம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டினர்.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் சில காட்சிகள் வரம்பு மீறுவதாகவும், ஆபாசமாக இருப்பதாகவும் கூறி யு ஏ சான்றளித்தனர்.
இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெற முடிவு செய்துள்ளார் மணிரத்னம்.
அதே நேரம் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்தும் உள்ளார்.
Post a Comment