கொச்சி: மலையாள கேமராமேன் மற்றும் இயக்குநர் அமல் நீரத்தைக் காதலித்து மணந்துள்ளார் நடிகை ஜோதிர்மயி. இது அவருக்கு 2வது திருமணமாகும்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி. இவர் தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் இவர்.
கல்லூரியில் படித்த காலத்தில் நிஷாந்த் என்பவரை காதலித்து மணந்தார். 2004ல் திருமணம் செய்த இவர்கள் 2011ல் முறைப்படி பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில், மலையாள தயாரிப்பாளர், இயக்குநர், கேமராமேன் அமல் நீரத் என்பவரை காதலித்து வந்தார் ஜோதிர்மயி. சாகர் அலயஸ் ஜாக்கி என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடியிருந்தார் ஜோதிர்மயி. அப்போதுதான் அமலுக்கும், அவருக்கும் இடைேய காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவரும் கொச்சியில் வைத்து இன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
அமல் நீரத், பிரபலமான கேமராமேன் ஆவார். ராம் கோபால் வர்மாவிடம் முன்பு பணியாற்றியுள்ளார். ஹாலிவுட்டிலும் பணியாற்றியுள்ளாராம். தற்போது மலையாளத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
Post a Comment