ரஜினி, கமல் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசன் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
எழுபதுகளின் பிற்பகுதியில் ரஜினி சில பிரச்சினைகளில் சிக்கியிருந்த நேரம். அவரை வைத்துப் படமெடுக்க தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தர்மயுத்தம் படத்தை எடுத்தவர் ஜாக்பாட் சீனிவாசன். அந்தப் படம் ரஜினிக்கு மிகவும் உதவியாக அமைந்தது.
கமலை வைத்து மீண்டும் கோகிலா போன்ற படங்களையும் இவர் தயாரித்துள்ளார். சாருசித்ரா என்பது இவரது பட நிறுவனமாகும்.
ஜாக்பாட் சீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
வடபழனியில் உள்ள வீட்டில் ஜாக்பாட் சீனிவாசன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
Post a Comment