மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
ஜெயகாந்தன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர் இளையராஜா. வாய்ப்பு கிடைக்கும்போது, தானே ஜெயகாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவது இளையராஜா வழக்கம்.
ஜெயகாந்தன் மரணம் இளையராஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவர் மரணத்துக்கு இன்று புகழஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு, ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா.
Post a Comment