உறவுகள் தொடரின் இயக்குநரும், அரசி தொடரின் சில பகுதிகளை இயக்கியவருமான பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலாஜி இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
பாலாஜி யாதவ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
Post a Comment