தன் உடல் நிலை குறித்து வெளியான செய்திகளை மறுத்துள்ள நடிகை பிந்து மாதவி, அத்தனை சீக்கிரம் என்னை கொன்றுவிடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை பிந்து மாதவிக்கு விபத்து என்றும், அவர் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனைக் கேள்விப்பட்ட பிந்து மாதவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதில், "என் உடல் நிலை குறித்து தவறாக செய்திகள் பரவுவதை இப்போதுதான் கேள்விப்பட்டேன். இதைப் பரப்புவதை நிறுத்துங்கள். அதற்குள் என்னைக் கொன்றுவிடாதீர்கள் ப்ளீஸ்.. நான் நலமாக சென்னையில் இருக்கிறேன்.. நாளை வெளியாகும் என் படத்தின் இசையைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்," என்றார்.
Post a Comment