சமந்தாவிடம் வாயைக் கொடுத்து நொந்து நூடுல்ஸான ஹீரோ

|

ஹைதராபாத்: இந்த சமந்தா கிட்ட வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டோமே என நடிகர் அல்லு அர்ஜுன் நொந்தாராம்.

தெலுங்கு திரை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் சமந்தா. சமந்தா ஹீரோயினாக நடித்தால் அந்த படம் ஹிட் என்று தெலுங்கு திரை உலகினர் கூறி வந்தனர். ஆண்டவன் அருளால் தனது படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதாக சமந்தா தெரிவித்தார்.

சமந்தாவிடம் வாயைக் கொடுத்து நொந்து நூடுல்ஸான ஹீரோ

இந்நிலையில் தான் தெலுங்கு திரை உலகில் இருந்து அவரது கவனம் தமிழ் திரை உலகம் பக்கம் திரும்பியுள்ளது. சமந்தாவை குசும்புக்கார நடிகை என்று ஆந்திர திரை உலகினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் நடந்த தெலுங்கு பட விழாவில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் பேசிய ஹீரோ அல்லு அர்ஜுன் கூறுகையில், சமந்தா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட். அதிர்ஷ்டக்காரரான அவர் என்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்ட சமந்தாவோ, கடந்த ஆண்டு என் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. அப்படி இருக்கையில் நானா அதிர்ஷ்டக்காரி என்று கேட்டு அவரை மடக்கியுள்ளார். வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் இப்படி சமந்தாவை பற்றி பேசி அசிங்கப்பட்டுவிட்டோமே என தலையில் அடித்துக் கொண்டாராம் அல்லு அர்ஜுன்.

 

Post a Comment