ஞாயிறன்று வீட்டுக்கு விருந்தினர் வந்தாலே மகிழ்ச்சிதான்.
வேந்தர் டிவியில் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.00 மணிமுதல் 9.00மணிவரை ஒளிபரப்பாகும் பல்சுவை நிகழ்ச்சி 'புத்தம் புது காலை' இந்த நிகழ்ச்சியில் ஆன்மீகம், பொதுஅறிவு, ராசிபலன் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டு நேயர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் தனித்தன்மையாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்கள் திரைப்பட அனுபவங்களையும் முக்கிய நிகழ்வுகளைவும் நேயர்களோடு பகிர்ந்து கொள்ளும் சிறப்பு புத்தும் புது காலையாக ஒளிபரப்பாகிறது.
அந்த வகையில் வரும் ஞாயிறன்று பிரபல நடிகர் நிழல்கள் ரவி, தன்னுடைய திரை அனுபவங்களை நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார். இந்த சிறப்பு புத்தும் புது காலை வரும் ஞாயிறு அன்று காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Post a Comment