மும்பை வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய ஐஸ்வர்யா ராய்க்கு அனுமதி மறுப்பு

|

மும்பை: மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஜஸ்பா படப்பிடிப்பை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் ஆராத்யாவை பெற்ற பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் விளம்பரப் படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் சஞ்சய் குப்தாவின் ஜஸ்பா படம் மூலம் மீண்டும் பாலிவுட்டில் நுழைகிறார்.

மும்பை வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய ஐஸ்வர்யா ராய்க்கு தடை

ஐஸ்வர்யா தற்போது ஜஸ்பா படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை மும்பையில் உள்ள வாங்கேட மைதானத்தில் நாளை நடத்த அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அந்த ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளதால் ஐஸ்வர்யா ராயின் படத்தின் படப்பிடிப்பை நடத்த அளிக்கப்பட்ட அனுமதி திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி நடப்பதால் படக்குழுவினர் யாரும் ஸ்டேடியத்திற்குள் வரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவுடன் சபானா ஆஸ்மி, இர்பான் கான், அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்து வரும் ஜஸ்பா படத்தை அக்டோபர் மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக அவரின் கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment