அஞ்சான் படத்துக்குப் பிறகு லிங்குசாமியும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள். இந்த முறை லிங்குசாமி படத்தை தயாரிக்கிறார். இயக்கப் போகிறவர் ஏற்கெனவே நாம் கூறியிருந்த சதுரங்க வேட்டை வினோத்.
லிங்குசாமிக்கும் சரி, சூர்யாவுக்கும் சரி, மறக்க முடியாத படமாக அமைந்தது அஞ்சான் படம். இந்தப் படத்தை விமர்சனம் என்ற பெயரில் கண்டபடி எழுதி நாசப்படுத்தினர் சமூக வலைத் தளங்களில். படத்தை இயக்கிய லிங்குசாமிக்கும் இதில் பெரிய மனவருத்தம்.
ஆனாலும் அதிலிருந்து மீண்டு இப்போது லிங்குசாமி இரண்டு புதிய படங்களை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார். சூர்யா இரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் லிங்குசாமியுடன் இணைகிறார் சூர்யா. இந்த முறை படத்தை லிங்குசாமி தயாரிக்க, இயக்கும் பொறுப்பை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். இதனை இன்று உறுதிப்படுத்தியுள்ளனர் லிங்குசாமியும் சூர்யாவும்.
Post a Comment