நித்யா மேனனை படத்தில் நடிக்க வைப்பது அவ்வளவு ஈஸி இல்லை!

|

சென்னை: நடிகை நித்யா மேனன் தன்னை படத்தில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள தெலுங்கு படமான ருத்ரமா தேவி விரைவில் ரிலீஸாக உள்ளது. இது தவிர அவர் துல்கர் சல்மான் ஜோடியாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ஓ காதல் கண்மணி மற்றும் ராகவா லாரன்ஸுடன் அவர் நடித்திருக்கும் காஞ்சனா 2 பேய் படமும் விரைவில் ரிலீஸாகிறது.

அங்கிள்ஸ், தாத்தா ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்: நித்யா மேனன்

ஓ காதல் கண்மணி படம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோலிவுட் ரசிகர்கள் பேய் படங்களாக பார்த்து பார்த்து ஹிட்டாக்குவதால் காஞ்சனா 2 நிச்சயம் கல்லா கட்டும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நித்யா மேனன் தன்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களியம் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்பது தான் அவர் விதிக்கும் முதல் நிபந்தனை ஆகும்.

தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர்கள் தன்னை அங்கு தொடக் கூடாது, இங்கு தொடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கிறாராம். இத்தனைக்கும் இயக்குனர் சம்மதித்தால் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

 

Post a Comment