'Readers Review': ஓ காதல் கண்மணி விமர்சனம்

|

நடிகர், நடிகைகள்: துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீமா சம்சன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

ஒளிப்பதிவு : பி சி ஸ்ரீராம்

எழுத்து, வசனம், இயக்கம்: மணி ரத்னம்

பாடல் வரிகள்: வைரமுத்து

திருமணம் ஆகி இருவரும் பிரிந்து இருந்தாலும் சரி, திருமணம் ஆகாமல் இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் சரி, அங்கு பயணிப்பது காதல் மட்டும் தான். காதல் என்ற ஒற்றை வார்த்தை சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளவர் தான் மணிரத்னம்.

கதை:

காதல். எங்கும், எதிலும், யாரிடம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது மணிரத்னம் கதையின் வாழ்வாதாரம் போலும்.திருமணத்தில் நம்பிக்கையில்லை என்ற ஒற்றை புள்ளியில் வெவ்வேறு இலக்கோடு வாழும் இருவர் காதலில் விழுகின்றனர். காதல் மட்டுமில்லாது, இருவரும் ஒன்றாய் வாழ்கின்றனர். இவர்களின் வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்துவதால், இவர்களின் பயணம் தொடர்ந்து திருமணத்தில் தொடர்கின்றதா? அல்லது அவரவர் லட்சியத்தில் முடிகிறதா? என்பது கதையின் முற்றுப் புள்ளி.

கலைஞர்களின் பங்களிப்பு:

துல்கர் துள்ளலான நடிப்பின் மூலம் இன்றைய இளம் காதல் கதாநாயகன் என்ற பெயரினை மட்டுமில்லை, இன்றைய இளம் பெண்களின் மனதையும் கொள்ளை கொண்டவராகவும் வலம் வருகிறார். தாராவாக வரும் நித்யா மேனன் தாராளமாகவே நடித்துள்ளார். இவரின் முக பாவனை, கிண்டல் பேச்சு அனைத்தும் அனைவரின் கைதட்டலையும் பெறுகின்றது.

ஞாபக மறதியால் வாடும் லீமா சம்சன் மற்றும் அவரை நேசிக்கும் கணவர் பிரகாஷ் ராஜ் காதலுக்கு முன்னுதாரனமாய் வரும் ஜோடிகளின் நடிப்பு அசத்தல்.

வைரமுத்துவின் பாடல் வரிகள் மற்றும் எ ஆர் ரஹ்மானின் இசை படத்தின் யானை பலம் என்றே கூறலாம். மணிரத்னத்தின் வசனங்களும் கதாப்பத்திரங்களும் குறை கூற முடியாத அளவு. இப்படத்தின் மிகப்பெரிய பலமே பி சி ஸ்ரீராம் என்று கூறலாம். பி சி ஸ்ரீராம் தன்னுடைய ஒளிப்பதிவால் இத்திரைப்படத்தினை முழுமைபெற செய்துள்ளார்.

மொத்தத்தில் கதை எப்படி..?

துள்ளலான துல்கரின் நடிப்பு, பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, எ ஆர் ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் இலக்கே இல்லாத கதை மொத்தத்தில் ஓ காதல் கண்மணி, ஓகே கண்மணி..

மணிரத்னத்தின் இக்காதல் பயணமும் வெற்றியை குறி வைக்கிறது.

 

Post a Comment