வங்கிக் கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும்..! - ஆஸ்கர் ரவிச்சந்திரன்

|

ரூ 97 கோடி வங்கிக் கடனை விரைவில் செட்டில் செய்துவிடுவேன் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஐ படத்தின் தயாரிப்புக்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார்.

Loan will be return to bank soon, says Aascar Ravi

ரூ.84 கோடிவரை கடன் வாங்கி இருந்ததார். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.97 கோடியாக உயர்ந்து விட்டது.

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்தாததால், படத்தையும் வெளியிட்டுவிட்டார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதனால் சொத்துக்களை முடக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு விட்டது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் வீடுகள், தியேட்டர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கு 121 சதுர அடி சொத்துக்களை வங்கி முடக்கியுள்ளது.

இது குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தரப்பில் கூறும்போது, "பணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டு வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டு அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும்..," என்றனர்.

 

Post a Comment