ஏழைக் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய லட்சுமி ராய்!

|

ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார் நடிகை லட்சுமி ராய்.

நடிகை லட்சுமி ராய்க்கு இன்று பிறந்த நாள். வழக்கமாக தனது பிறந்த நாள் அன்று ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் செல்லும லட்சுமி ராய், அங்குள்ளவர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

Lakshmi Rai celebrates birthday with Orphanage

இந்த ஆண்டும் சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்றார் லட்சுமி ராய்.

Lakshmi Rai celebrates birthday with Orphanage

குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடிய அவர், பின்னர் இனிப்புகள் வழங்கினார். அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள் உள்பட பல உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கினார்.

Lakshmi Rai celebrates birthday with Orphanage

அவர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறினார். அவர் கூறுகையில், " ஆண்டு தோறும் என் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாட நினைக்கிறேன். விரும்புகிறேன். சில ஆண்டுகளில் ஷூட்டிங்கில் இருந்தாலும்கூட, இந்த உதவு சரியாக போய்ச் சேர வேண்டும் என்பது என் ஆசை," என்றார்.

 

Post a Comment