ஐயப்பன் கோவிலில் வழிபட்ட மோகன்லால்!

|

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குப் போன நடிகர் மோகன்லால் அங்கு பயபக்தியுடன் வழிபட்டார்.

மோகன்லால் நடிப்பில் லைலா ஓ லைலா படம் கடந்த வாரம் ஒரு வழியாக வெளியாகி விட்டது. இதே போன்று இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வந்த லோஹம் திரைப் படத்தில் தன்னுடைய பகுதியை முடித்துக் கொடுத்து விட்டார்.

அடுத்த படம் ஆரம்பிப்பதற்கு முன் இரண்டு படங்களையும் முடித்துக் கொடுத்த திருப்தியோடு சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை பக்தியோடு தரிசித்து வந்திருக்கிறார்.

Actor Mohanlal Visits Lord Ayyappa Temple in Sabarimala

கடந்த வெள்ளிகிழமையன்று தனது நண்பர்களுடன் சென்ற மோகன் லால் சாமி தரிசனத்தை முடித்து கையோடு அதிகாலை 5 மணி அளவில் நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம் பின்னர் கணபதி ஹோமம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

கோவில் தந்திரியையும் மேல் சாந்தி கிருஷ்ண தாஸ் நம்பூதிரியையும் சந்தித்து அவர்களிடமும் ஆசி பெற்று திரும்பி உள்ளார்.

 

Post a Comment