சென்னை: மதிப்பெண்கள் உங்கள் வெற்றியை ஒருபோதும் தீர்மானிக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என பிளஸ் 2 மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறியுள்ளார்.
கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் 6 பேர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.
பள்ளித் தேர்வுகள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பதாக கருதி இவ்வாறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது தவறான அணுகுமுறை ஆகும்.
To all the dear students out there, always remember that your score doesn't define your success in life. Best wishes for a bright future:)
— Suriya Sivakumar (@Suriya_offl) May 7, 2015 இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் மதிப்பெண் என்பது உங்களின் வெற்றியை ஒரு போதும் தீர்மானிக்காது என்பதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் அனைவரது எதிர்காலமும் சிறப்பாக அமைய வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா, ‘அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை துவங்கி வருடம் தோறும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார். மேலும், ஏராளமானவர்களை தத்தெடுத்து படிக்க வைக்கிறார். இந்த வருடமும் பல மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment